இலங்கைக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ஹர்சித் ராணா அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் குறித்து பேசியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜூலை 18) அறிவித்தது. டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா அணியை வழிநடத்துகிறார். இரண்டு தொடர்களுக்குமே ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடுவார்களா என்ற கேள்விக்கு இன்று விடை கிடைத்துள்ளது. இருவரும் ஒருநாள் தொடரில் விளையாடுகின்றனர். ஒருநாள் தொடரில் ஹர்சித் ராணாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ஹர்சித் ராணா இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் குறித்து பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தது குறித்து ஹர்சித் ராணா பேசியதாவது: கடினமாக உழைப்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், நான் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்காமல் மனதளவில் காயமடைகிறேனோ, அப்போது என்னுடைய அறைக்கு சென்று அழத் தொடங்கிவிடுவேன். ஆனால், எனது அப்பா பிரதீப் ஒருபோதும் அவரது நம்பிக்கையை இழந்ததில்லை. என்னுடைய இந்த பயணத்தில் நான் மூன்று பேருக்கு நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறேன்.
எனது அப்பா, என்னுடைய பயிற்சியாளர் அமித் பண்டாரி மற்றும் மிக முக்கியமாக கௌதம் கம்பீர் அவர்களுக்கு நன்றிகூற கடமைப் பட்டிருக்கிறேன். எனது ஆட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்தவர் கௌதம் கம்பீர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அவரது ஆலோசனைகள் எனது மனநிலையை மாற்றியது. உன்மீது நம்பிக்கை இருக்கிறது. உன்னால் போட்டியை வென்று கொடுக்க முடியும் என்று கௌதம் கம்பீர் எப்போதும் கூறுவார் என்றார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடர் ஜூலை 27 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்; முக்கிய ஆஸி. வீரர்கள் விளையாடுவதில் சிக்கல்!
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

மற்றவர்கள் நினைப்பது முக்கியமல்ல, அதிரடியாக விளையாடுங்கள்; அபிஷேக் சர்மாவுக்கு கம்பீர் ஆதரவு!

இந்திய அணியில் கம்பீர் நீக்கப்பட்ட பின்.. மௌனம் கலைத்த தேர்வுக்குழு முன்னாள் தலைவர்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு



