போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

ரஞ்சி டிராபி: மகாராஷ்டிர அணி கேப்டனாக ருதுராஜ் நியமனம்!

ரஞ்சி டிராபி தொடரில் மகாராஷ்டிர அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

News image

ருதுராஜ் கெய்க்வாட் - படம் | எக்ஸ்

Updated On :25 ஜூலை 2024, 6:49 pm IST

2024-2025 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி தொடரில் மகாராஷ்டிர அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்தியா - ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இலங்கை தொடரில் வாய்ப்புக்கு கிடைக்காதது மிகப்பெரிய பேசு பொருள் ஆனது. மூத்த வீரர்களும் பயிற்சியாளர்களும் வீரர் தேர்வு செய்யும் ஆணையத்தின் மீது தங்கள் ஆதங்கத்தை கொட்டினர்.

எனினும், தற்போது ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது. மகாராஷ்டிர கிரிக்கெட் அணி 2024-2025 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி அணியின் கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹராரேயில் ஜிம்பாப்வேக்கு எதிராக கெய்க்வாட் சிறப்பாக செயல்பட்டார். அவர் ஒரு போட்டியில் ஆட்டமிழக்காமல் 77 ரன்கள் எடுத்திருந்தார். மேலும், அவர் ஒருப்போட்டியில் 49 ரன்கள் எடுத்தார். ருதுராஜ் கெய்க்வாட் இந்தியாவுக்காக 23 டி20 போட்டிகளில் விளையாடி 633 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 6 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

ருதுராஜ் கெய்க்வாட் மகாராஷ்டிர அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார். ருதுராஜ் 29 முதல் தர போட்டிகளில் 2041 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 6 சதங்கள், 10 அரைசதங்கள் அடித்துள்ளார். 77 லிஸ்ட் ஏ போட்டிகளில் 4130 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 15 சதங்கள், 17 அரை சதங்கள் மற்றும் இரட்டைச்சதமும் அடங்கும்.

மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் ரஞ்சி டிராபிக்கான அணியை அறிவித்துள்ளது. அதில், அர்ஷின் குல்கர்னி, ராகுல் திரிபாதி, சச்சின் தாஸ், சித்தேஷ் வீர், நிகில் நாயக், அங்கித் பாவ்னே, திக்விஜய் பாட்டீல், சவுரப் நாவலே, மந்தர் பண்டாரி, ஹிதேஷ் வாலுஞ்ச், விக்கி ஓட்ஸ்வால், சத்யஜித் பச்சாவ் ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

ரஞ்சிக் கோப்பையில் மகாராஷ்டிரத்தின் முதல் போட்டி ஜம்மு-காஷ்மீருக்கு எதிராக அக்டோபர் 11ஆம் தேதி தொடங்குகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.