அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

எம்.எஸ்.தோனி குறித்து மனம் திறந்த ரிக்கி பாண்டிங்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.

News image
எம்.எஸ்.தோனி (கோப்புப் படம்)- படம் | ஐசிசி
Updated On :5 நவம்பர் 2024, 3:35 pm

DIN

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இந்த மாத இறுதியில் நடைபெற வாய்ப்பிருதாகக் கூறப்படுகிறது. ஐபிஎல் மெகா ஏலம் தொடங்குவதற்கு முன்பாக, அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொண்டன.

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸில் எம்.எஸ்.தோனி விளையாடுவாரா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. எம்.எஸ்.தோனியை சிஎஸ்கே தக்க வைத்தது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மீண்டும் ஒருமுறை தோனி கிரிக்கெட் விளையாடுவதை பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி ரசிகர்களுக்கு தொற்றிக் கொண்டது.

எம்.எஸ்.தோனி குறித்து பாண்டிங்...

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ்.தோனி விளையாடுவது உறுதியாகியுள்ள நிலையில், ஐசிசி ரிவ்யூவில் ரிக்கி பாண்டிங், தோனி குறித்து பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ரிக்கி பாண்டிங்

ரிக்கி பாண்டிங்

ஐசிசி ரிவ்யூவில் எம்.எஸ்.தோனி குறித்து ரிக்கி பாண்டிங் பேசியதாவது: இரண்டு சீசன்களுக்கு முன்பாக நடைபெற்ற ஐபிஎல் சீசன் எம்.எஸ்.தோனிக்கு மோசமானதாக அமைந்தது. ஆனால், கடந்த ஆண்டு அவர் அதிலிருந்து மீண்டு அதிரடியாக விளையாடினார். பழைய தோனி எப்படி விளையாடுவாரோ அந்த மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடுத்த ஐபிஎல் சீசனும் அவருக்கு அவ்வாறே இருக்கப் போகிறது. அவர் முழு சீசனிலும் விளையாடாமலிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், அவர் விளையாடும் போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்துவார்.

அவர் எந்த அணியில் விளையாடினாலும், அணியின் கேப்டனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர் இடம்பெறும் குழுவில் அணியின் ஆலோசகராக எப்போதும் இருப்பார். அவர் அணியில் விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் சென்னை அணியுடன் அவர் இருப்பது மிகவும் முக்கியம். அவரது தலைமைப் பண்பு மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சிஎஸ்கேவுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

ஐபிஎல் போட்டிகளில் எம்.எஸ்.தோனி இன்னிங்ஸின் கடைசி 20 பந்துகள் இருக்கையில் களமிறங்குகிறார். இருப்பினும், அணிக்கு அவரது பங்களிப்பை கொடுக்கத் தவறியதில்லை. அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரினை உயர்த்தவும், வெற்றி இலக்கை எட்டிப் பிடிக்கவும் அவர் உதவுகிறார். அவரால் ஆட்டத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.

எம்.எஸ்.தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.4 கோடிக்கு தக்கவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.