கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னௌ அணியின் திட்டம் என்ன? பயிற்சியாளர் பதில்!

ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் திட்டம் என்ன என்பது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டிங் லாங்கர் பேசியுள்ளார்.

News image

ஜஸ்டின் லாங்கர் (கோப்புப் படம்)

Updated On :9 நவம்பர் 2024, 4:11 pm

DIN

ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக எண்ணிக்கையிலான திறமையான வீரர்களை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்வோம் என லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், மோஷின் கான் மற்றும் ஆயுஷ் பதோனி ஆகியோர் தக்கவைக்கப்பட்டனர்.

லக்னௌவின் திட்டம் என்ன?

ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக 5 வீரர்களை தக்கவைத்துள்ள லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் மீதம் ரூ.69 கோடி உள்ளது. இந்த தொகையைப் பயன்படுத்தி மெகா ஏலத்தில் வீரர்களை லக்னௌ ஏலமெடுக்க உள்ளது.

இந்த நிலையில், ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக எண்ணிக்கையிலான திறமையான வீரர்களை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்வோம் என லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரைப் பொருத்தவரை எந்த மாதிரியான யுக்தியைப் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியமானதாக பார்க்கப்படும். ஆனால், எனக்குத் தெரிந்ததெல்லாம் வீரர்களின் திறமை என்பது மிக முக்கியம் எனக் கூறுவேன். சில ஆல்ரவுண்டர்கள் பேட்டிங் ஆல்ரவுண்டர்களாகவும், பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாகவும் சிறப்பாக செயல்படுகின்றனர். அதனால், அவர்கள் எப்போதுமே மதிப்புமிக்க வீரர்களாக உள்ளனர்.

சிறப்பான வீரர்கள் ஆட்டத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்பதை நான் எப்போதும் நம்புகிறேன். மார்கஸ் ஸ்டாய்னிஸ் போன்ற வீரர் ஒருவரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடுவார். அதேபோல அவரது பந்துவீச்சு திறமை அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் முடிந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான திறமை வாய்ந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்வோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.