கடைசி டி20: இந்தியா பேட்டிங்; தொடரைக் கைப்பற்றுமா?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
கடைசி டி20: இந்தியா பேட்டிங்; தொடரைக் கைப்பற்றுமா?
படம் | பிசிசிஐ
Published on
Updated on
1 min read

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோகன்ஸ்பெர்க்கில் இன்று (நவம்பர் 15) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

மூன்றாவது டி20 போட்டியில் விளையாடிய அதே பிளேயிங் லெவனுடன் இரண்டு அணிகளும் களம் காண்கின்றன.

4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளதால், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி களம் காண்கிறது. அதே சமயம், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் தென்னாப்பிரிக்கா களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com