ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடியதைத் தொடர்ந்து மீதமுள்ள டெஸ்ட்டுகளில் ராகுலின் இடத்தை மாற்றாதீர்கள் என முன்னாள் வீரர் தோடா கணேஷ் கூறியுள்ளார்.
முதல் போட்டியில் ரோஹித் சர்மா இல்லாததால் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உடன் கே.எல்.ராகுல் களமிறங்கினார்.
இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாக ஆஸி. அணி 67/7 ரன்கள் இருக்கும்போது முதல்நாள் முடிவுக்கு வந்தது. பும்ரா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
74 பந்தில் 24 ரன்கள் எடுத்து அசத்திய கே.எல்.ராகுலின் விக்கெட் நடுவரின் தவறான முடிவென இந்திய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
முதல் இன்னிங்ஸில் 22.2 ஆவது ஓவரில் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் கே.எல்.ராகுல் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழப்பார். கள நடுவர் அவுட் கொடுக்காமல் டிஆர்எஸ் எடுத்து மூன்றாம் நடுவர் கொடுத்த விக்கெட். இதில் நிச்சயமாக பேட்டில்தான் (bat) முதலில் பட்டிருக்கும் என சிலரும் சிலர் பேடில் (pad) பட்ட சப்தம் எனவும் சிலரும் கருத்து கூறுகிறார்கள்.
அடுத்து ரோஹித் அணியில் வந்ததும் ராகுல் இடம் மாற்றப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோடா கணேஷ் கூறியதாவது:
இந்தத் தொடர் முழுவதும் கே.எல்.ராகுலை தொடக்க வீரராக களமிறக்குங்கள். தயவுசெய்து அவரது இடத்தை மாற்றிவிடாதீர்கள். புதிய பந்தினை எதிர்கொள்வதில் அவர் சிறப்பாக செயல்படுகிறார். ரோஹித்தால் மிடில் ஆர்டரிலும் பேட் செய்ய முடியும் என்றார்.
Just have KL Rahul opening throughout the tour. For heavens sake donât shuffle his spot again. Heâs the best bet to handle the conditions with the new ball. Rohit can bat in the middle order #AUSvIND
— Dodda Ganesh | ದà³à²¡à³à²¡ à²à²£à³à²¶à³ (@doddaganesha) November 22, 2024
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம்பெற வேண்டும்: முன்னாள் வீரர்
அஸ்ஸாமில் நிரந்தர தீர்வு காண அறிவியல் அடிப்படையிலான அமைப்பு வேண்டும்: ராகுல்

குற்றத்தை ஒப்புக்கொண்ட டேவிட் வார்னர்..! 9 மாதங்கள் சிறை?

கொந்தளிக்கும் தில்லி... கைது செய்யப்பட்ட ராகுலின் மூக்கில் ரத்தம் கசிந்ததால் பரபரப்பு!
விடியோக்கள்
பிரசாந்த் கிஷோர் வெற்றிப் பின்னணி...| Ravindran duraisamy Interview | Prashant Kishor | Jan Suraaj | Bankipur | Bjp



