முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

குற்றத்தை ஒப்புக்கொண்ட டேவிட் வார்னர்..! 9 மாதங்கள் சிறை?

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டது குறித்து...

News image

டேவிட் வார்னர் - படம்: பிடிஐ

Updated On :22 ஜூலை 2026, 4:15 pm IST

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தான் கடந்த ஏப்ரலில் குடித்துவிட்டு காரை ஓட்டியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

சிட்னியில் மரூப்ரா, மலபார் சாலையில் நியூ சௌத் வேல்ஸ் காவல்துறையினர் நடத்திய சோதனையில் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் டேவிட் வார்னர் கைது செய்யப்பட்டதாக கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலிய ஊடகங்கள் தகவல் தெரிவித்தன.

காவலர்கள் நடத்திய சோதனையில் 0.104 என்ற அளவில் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இது ஆஸ்திரேலியாவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு கூடுதலானது எனக் கூறப்படுகிறது. இதனால், அவர் மீது அபராதம் விதிக்கப்பட்டு, மரூப்ரா காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்தக் குற்றத்துக்கு 9 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படுமா அல்லது 2 லட்சம் அபாரதம் விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி டேவிட் வார்னருக்கான தண்டனை அறிவிக்கப்படும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வார்னரின் வழக்கறிஞர் பாபி ஹில் கூறியிருப்பதாவது:

வார்னர் என்ன தவறு செய்தார் என்பது அவருக்குத் தெரியும். உபேர் அழைத்து செல்லாமல் அவராகவே காரை ஓட்டிய முட்டாள்தனமான முடிவை அவர் ஒப்புக்கொண்டார்.

இயேசுவின் உயிர்த்தெழுதல் அன்று ஒரு கிளாஸ் வைன் எடுத்துக்கொண்டது தவறில்லை. சிலர் அதை முற்றிலும் தவறென நினைக்கலாம். அவர் செய்த குற்றம் பிளான் பி இருக்கும்போது முட்டாள்தனமான பிளான் ஏவை தேர்வு செய்ததுதான் என்றார்.

பிபிஎல் தொடரில் சிட்னி தண்டர் அணிக்கு கேப்டனாக இருக்கும் டேவிட் வார்னருக்கு இது புதிய சிக்கலை அளித்துள்ளது. இதனால், கேப்டன்சியை இழக்கும் வாய்ப்பிருக்கிறது.

Summary

David Warner admits to drunk-driving charge

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.