
ஐபிஎல் மெகா ஏலத்தில் வாஷிங்டன் சுந்தர் குஜராத் டைட்டன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று (நவம்பர் 24) தொடங்கியது. இந்த ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பந்த் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அவரை லக்னௌ அணி ஏலத்தில் எடுத்தது.
இதையும் படிக்க: முதல் டெஸ்ட்: ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
இந்த நிலையில், இன்று (நவம்பர் 25) இரண்டாம் நாள் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ஏலத்தில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.3.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
வாஷிங்டன் சுந்தர் தற்போது பார்டர் - கவாஸ்கர் தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.