அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

பஞ்சாப் கிங்ஸில் முஷீர்கான்! விற்பனை ஆகாத சர்ஃப்ராஸ் கான்!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.30 லட்சத்துக்கு முஷீர் கானை வாங்கியுள்ளது.

News image

சர்ஃப்ராஸ் கான் | முஷீர்கான்

Updated On :25 நவம்பர் 2024, 8:37 pm IST

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.30 லட்சத்துக்கு முஷீர் கானை வாங்கியுள்ளது. அதேசமயம் இந்திய வீரர் சர்ஃப்ராஸ் கானை வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை.

இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் வீரரான சர்ஃப்ராஸ் கான் மற்றும் அவரது சகோதரர் முஷீர்கான் இருவரும் ஏலத்தில் பதிவு செய்திருந்தனர். முஷீர்கான் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

முஷீர் கான், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அவரது அடிப்படை விலையான ரூ.30 லட்சத்தில் விற்கப்பட்டுள்ளார். 19 வயதான டாப்-ஆர்டர் பேட்டரான முஷீர்கானுக்கு இது முதல் ஐபிஎல் ஆகும்.

சர்ஃப்ராஸ் கான் கடைசியாக 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடினார். அவர் 2015 இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அறிமுகமானார். அவர் ஆர்சிபிக்காக 3 ஆண்டுகளில் 25 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால், அவரால் அணியில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்கமுடியவில்லை.

சர்ஃப்ராஸ் கான் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும் 3 ஆண்டுகள் விளையாடியுள்ளார். ஆனால், அங்கு அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 2 சீசன்களில் தில்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 10 ஆட்டங்களை மட்டுமே விளையாடியுள்ளார்.

சர்ஃப்ராஸ் கான் இதுவரை 50 போட்டிகளில் விளையாடி, அவர் 22.50 சராசரி, 130.58 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 585 ரன்கள் எடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.