ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

ஏலத்தில் விற்பனை ஆகாமல் போன சச்சின் டெண்டுல்கர் மகன்! ரசிகர்கள் அதிர்ச்சி!

ஏலத்தில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் விற்பனையாகாமல் போனதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

News image
Updated On :25 நவம்பர் 2024, 10:29 pm IST

ஐபிஎல் ஏலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் விற்பனையாகாமல் போனதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று (நவம்பர் 24) தொடங்கியது. முதல் நாளில் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்றும் ஏலத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.

13 வயது சூரியவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் எடுத்த நிலையில், மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஏலத்தின் 2-வது நாளில் வாங்கப்பட்டவர்களில் அதிகவிலையில் முதலிடத்தை பிடித்தார்.

ஆகாஷ் தீப் (லக்னௌ, ரூ.8 கோடி), தீபக் சாஹர் (மும்பை, ரூ.9.25 கோடி), முகேஷ் குமார் (தில்லி, ரூ.8 கோடி), துஷார் தேஷ்பாண்டே (ராஜஸ்தான், ரூ.6.50 கோடி) அனைவரும் அதிகவிலைக்குச் சென்றனர்.

கிட்டத்தட்ட ஏலம் முடியும் தருவாயில் சர்வதேச அணிக்கு விளையாடாத வீரர்கள், முந்தைய நாளில் விற்பனையாகாத வீரர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த சச்சினின் மகன் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. அவருக்கு அடிப்படை விலையாக ரூ.30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், எந்த அணியில் அவரை வாங்க ஆர்வம் காட்டவில்லை.

2021 ஆம் ஆண்டு சையத் முஷ்டாக் அலி டிராபியில் ஹரியானாவுக்கு எதிராக மும்பைக்காக அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமானார். 17 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள அர்ஜுன் டெண்டுல்கர் 37 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 5/25. மேலும், அவர் முதல் தரப் போட்டியில் அதிகபட்சமாக 120 ரன்கள் குவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் மட்டுமின்றி உலக கிரிக்கெட் வரலாற்றில் மிக நீண்ட நெடிய வரலாறு கொண்டுள்ள கிரிக்கெட் கடவுள் என்ற வர்ணிக்கக்கூடிய சச்சின் டெண்டுல்கர் மகன் ஐபிஎல் ஏலத்தில் விற்பனை ஆகாதது அனைவரின் மத்தியிலும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.