அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பாக். வன்முறை: பாதியில் நாடு திரும்பிய இலங்கை ஏ அணி!

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வன்முறையால் இலங்கை ஏ கிரிக்கெட் அணி பாதியில் நாடு திரும்பியுள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2024, 7:16 am

DIN

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வன்முறையால் இலங்கை ஏ கிரிக்கெட் அணி பாதியில் நாடு திரும்பியுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரின் ஆதரவாளா்கள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பாதுகாப்புப் படை வீரா்கள் 6 போ் பலியாகினா்.

அதன்தொடர்ச்சியாக பாகிஸ்தானில் வன்முறை தீவிரம் அடைந்துவரும் நிலையில், பாகிஸ்தான் ஷாகீன்ஸ் மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கு இடையிலான 50 ஓவர்கள் கொண்ட இரண்டு போட்டிகளில் விளையாடாமல் இலங்கை ஏ அணி நாடு திரும்பியுள்ளது. இதை பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரியமும் உறுதிபடுத்தியுள்ளது.

முதல் போட்டி கடந்த திங்கள்கிழமை ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்ற நிலையில் அந்தப் போட்டி பாகிஸ்தான் ஷாகீன்ஸ் அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. மற்ற இரு போட்டிகள் இன்று(நவ.27) மற்றும் வெள்ளிக்கிழமை(நவ.29) இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்தது.

பாகிஸ்தான் முழுவதும் ஏற்பட்டுள்ள வன்முறையைக் கட்டுப்படுத்த அதிகளவில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் மத்திய உள்துறை அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் அடுத்தாண்டு பிப்ரவரியில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இன்னும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டவில்லை. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணியும் பாகிஸ்தானுக்குச் செல்ல மறுத்துவருகிறது.

2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்குப் பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் உடனான எந்த இருதரப்பு போட்டிகளிலும் விளையாடவில்லை. ஆனால், உலகக்கோப்பை, ஆசியக்கோப்பைகளில் விளையாடியிருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். அதற்கு இரண்டு நாள்கள் முன்னதாக, நவம்பர் 29 ஆம் தேதி ஆலோசனை நடைபெறவுள்ளது.

இந்திய அரசு தற்போதைய நிலையில் உறுதியாக இருப்பதால், பாகிஸ்தானுக்கு வெளியே ஹபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபி நடத்தவும் விருப்பம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.