அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

மகளிர் உலகக்கோப்பை: தெ.ஆ. ஜெர்சியில் அன்புக்குரியவர்களின் பெயர்கள்!

தென்னாப்பிரிக்கா மகளிரணி தங்கள் அன்புக்குரியவர்களைக் கௌரவிக்கும் வகையில் சிறப்பு ஜெர்சிகளை உருவாக்கி உள்ளது.

News image
தென்னாப்பிரிக்கா மகளிரணியினர்.
Updated On :4 அக்டோபர் 2024, 11:12 am

DIN

டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா மகளிரணி தங்கள் அன்புக்குரியவர்களைக் கௌரவிக்கும் வகையில் சிறப்பு ஜெர்சிகளை உருவாக்கி உள்ளது.

மகளிருக்கான 9-வது உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபை ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகள் அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கிய நிலையில் வருகிற அக்டோபர் 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்க மகளிரணியின் ஜெர்சியில் தங்களுக்கு பிரியமான நண்பர்கள் அல்லது உறவினர்கள் 5 பேரின் பெயர்களை பிரத்யேகமாகப் பதித்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அணியின் உள்ள ஒவ்வொரு வீராங்கனையும் தங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத மற்றும் தங்களுக்கு ஆதராவாக இருந்த 5 பேரின் பெயர்களை ஜெர்சியில் எம்பிராய்டரி செய்துகொள்ளலாம்.

அந்தப் பெயர்கள் ஜெர்சியின் காலர் பகுதியில் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அணியின் விக்கெட் கீப்பர் சினோலா தனது ஜெர்சியில் தனது தாய் மற்றும் ஆலோசகரின் பெயரை குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த முயற்சி சிறப்பான யோசனையாக உள்ளது. இது மிகவும் சிறப்பு வாய்ந்தது” என்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவற்றுடன் போட்டியின் பி குழுவில் தென்னாப்பிரிக்கா இடம் பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்க அணி இன்று(அக்.4) துபையில் மேற்கிந்திய அணிகளுடன் தனது முதல் போட்டியில் விளையாடி வருகிறது.

தென்னாப்பிரிக்கா மகளிரணி: லாரா வோல்வார்ட் (கேப்டன்), அன்னேக் போஷ், டஸ்மின் பிரிட்ஸ், நாடின் டி க்ளெர்க், அன்னேரி டெர்க்சன், மைக் டி ரிடர், அயன்டா ஹ்லுபி, சினாலோ ஜஃப்டா, மரிசான் கப், அயபோங்கா காக்கா, சுனே லூஸ், நோன்குலுலேகோ ம்லாபா, ச்லோ ஸ்னிக் நாயுடு, துமி, ச்லோ ட்ரையான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.