தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிபிஎல்: முதல்முறையாக கோப்பையை வென்ற அணி..! டு பிளெஸ்ஸி கூறியதென்ன?

கரீபியன் பிரீமியர் லீக்கில் (சிபிஎல்) டு பிளெஸ்ஸியின் செயிண்ட் லூசியா அணி முதல்முறையாக கோப்பையை கோப்பையை வென்றுள்ளது.

News image

டு பிளெஸ்ஸி

Updated On :8 அக்டோபர் 2024, 10:04 am

DIN

கரீபியன் பிரீமியர் லீக்கில் (சிபிஎல்) டு பிளெஸ்ஸியின் செயிண்ட் லூசியா அணி முதல்முறையாக கோப்பையை கோப்பையை வென்றுள்ளது.

இறுதிப் போட்டியில் ஹிம்ரான் தாஹிர் தலைமையிலான அமேசான் வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 138/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரிடோர்யஸ் 25, ஷாய் ஹோப் 22 ரன்கள் எடுத்தார்கள்.

அடுத்து விளையாடிய செயிண்ட் லூசியா அணி 18.1 ஓவரில் 139/4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் ஆரோன் ஜோன்ஸ் 48, ரோஸ்டன் சேஸ் 39 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்கள்.

சிபிஎல் வரலாற்றில் செயிண்ட் லூசியா அணி முதல்முறையாக கோப்பையை வென்றது. மெஸ்ஸி, ரோஹித் சர்மா பாணியில் டு பிளெஸ்ஸி கொண்டாடினார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் டு பிளெஸ்ஸி கூறியதாவது:

என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு - பிலிப் 4:13.

செயிண்ட் லூசியா அணிக்கு முதல் கோப்பை. தொடக்கத்தில் இந்த அணியைப் பார்த்து யாரும் கோப்பையை வெல்லுவார்கள் எனக் கூறவில்லை. ஆனால், அணியின் முயற்சியினாலும் எங்களது நம்பிக்கையினாலும் இதைச் சாத்தியமாக்கினோம். அணியினைரை நினைத்து பெருமையாக இருக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.