அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

அதிரடியாகதான் விளையாடுவோம்..! மஹ்மதுல்லா பேட்டி!

வங்கதேச அணியின் மூத்த வீரரான மஹ்மதுல்லா இனியும் அதிரடியான பேட்டிங்கை தொடருவோமெனக் கூறியுள்ளார்.

News image

மஹ்மதுல்லா - படம்: எக்ஸ் / வங்கதேச கிரிக்கெட்

Updated On :9 அக்டோபர் 2024, 12:16 pm IST

வங்கதேச அணியின் மூத்த வீரரான ஆல் ரவுண்டர் மஹ்மதுல்லா இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி தொடருக்குப் பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

38 வயதான மஹ்மதுல்லா 2007 ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமானார். இவர் இதுவரை 139 போட்டிகளில் விளையாடி 117.74 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2,400 ரன்கள் எடுத்துள்ளார். ஆல் ரவுண்டரான மஹ்மதுல்லா 40 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட்டினை 0-2 என இழந்த வங்கதேசம் டி20யில் 0-1 என பின்னிலையில் இருக்கிறது. இன்று 2ஆவது டி20 அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.

முதல் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த வங்கதேச அணியின் மஹ்மதுல்லா பேசியதாவது:

கடந்த சில வருடமாக எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். முதல் போட்டியில் மோசமாக விளையாடியதாக நினைக்கவில்லை.

ஒரு போட்டியினால் எங்களது ஆட்டத்தின் திறனை நாங்கள் சந்தேகப்படவில்லை. அடுத்த போட்டியில் வெற்றி பெற முயற்சிப்போம்.

நாங்கள் அதிரடியாக பேட்டிங் விளையாட போகிறோம். நாங்கள் திட்டமிட்டபடி ஒழுங்காக விளையாடினால் நாங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.