சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

பார்டர் - காவஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர்: கேமரூன் கிரீன் விலகல்

ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் திங்கள்கிழமை விலகினார்.

News image

கேமரூன் கிரீன்

Updated On :15 அக்டோபர் 2024, 2:59 am IST

இந்தியாவுக்கு எதிரான பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரிலிருந்து, ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் திங்கள்கிழமை விலகினார்.

முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்டுள்ள காயத்துக்காக அவர் அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள இருப்பதாகவும், அதிலிருந்து குணமடைந்து முழுமையான உடற்தகுதிபெற 6 மாதங்கள் ஆகலாம் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போது அவருக்கான காயத்தின் பாதிப்பு தெரியவந்தது.

இந்த காயத்துக்கான அறுவைச் சிகிச்சை மற்றும் ஓய்வு காரணமாக, பார்டர் - காவஸ்கர் கோப்பை தொடருடன், பிப்ரவரியில் இலங்கை பயணம், சாம்பியன்ஸ் கோப்பை போட்டி ஆகியவற்றிலும் அவர் பங்கேற்க இயலாது. மேலும், ஐபிஎல் போட்டியில் அவர் பங்கேற்பதும் சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.

தற்போது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேமரூன் கிரீன் இடத்துக்கென பேட்டிங் மற்றும் பெளலரை ஆஸ்திரேலிய அணி தேர்வு செய்ய வேண்டியுள்ளது. இந்தியா "ஏ' அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய "ஏ' அணியிலிருந்து இதற்கான தேர்வு நடைபெறலாம் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.