குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

பார்டர் - காவஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர்: கேமரூன் கிரீன் விலகல்

ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் திங்கள்கிழமை விலகினார்.

கேமரூன் கிரீன்

Published On :15 அக்டோபர் 2024, 2:59 am IST

இந்தியாவுக்கு எதிரான பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரிலிருந்து, ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் திங்கள்கிழமை விலகினார்.

முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்டுள்ள காயத்துக்காக அவர் அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள இருப்பதாகவும், அதிலிருந்து குணமடைந்து முழுமையான உடற்தகுதிபெற 6 மாதங்கள் ஆகலாம் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போது அவருக்கான காயத்தின் பாதிப்பு தெரியவந்தது.

இந்த காயத்துக்கான அறுவைச் சிகிச்சை மற்றும் ஓய்வு காரணமாக, பார்டர் - காவஸ்கர் கோப்பை தொடருடன், பிப்ரவரியில் இலங்கை பயணம், சாம்பியன்ஸ் கோப்பை போட்டி ஆகியவற்றிலும் அவர் பங்கேற்க இயலாது. மேலும், ஐபிஎல் போட்டியில் அவர் பங்கேற்பதும் சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.

தற்போது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேமரூன் கிரீன் இடத்துக்கென பேட்டிங் மற்றும் பெளலரை ஆஸ்திரேலிய அணி தேர்வு செய்ய வேண்டியுள்ளது. இந்தியா "ஏ' அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய "ஏ' அணியிலிருந்து இதற்கான தேர்வு நடைபெறலாம் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.