பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

சதம் விளாசிய சௌத் ஷகீல்; 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து தடுமாற்றம்!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி தடுமாறி வருகிறது.

News image

சௌத் ஷகீல் - படம் | AP

Updated On :25 அக்டோபர் 2024, 6:28 pm IST

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி தடுமாறி வருகிறது.

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (அக்டோபர் 24) ராவல்பிண்டியில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி, 267 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 119 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பென் டக்கெட் 52 ரன்களும், கஸ் அட்கின்சன் 39 ரன்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் சாஜித் கான் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நோமன் அலி 3 விக்கெட்டுகளையும், ஜாஹித் மஹ்முத் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

சதம் அடித்த சௌத் ஷகீல்

இங்கிலாந்து அணி 267 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஷஃபீக் 14 ரன்களிலும், சைம் ஆயூப் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷான் மசூத் 26 ரன்களிலும், கம்ரான் குலாம் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சௌத் ஷகீல் ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து நிதானமாக விளையாடினார்.

முகமது ரிஸ்வான் சிறிது நேரம் தாக்குபிடித்தபோதிலும், 25 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, சௌத் ஷகீல் மற்றும் நோமன் அலி ஜோடி சேர்ந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌத் ஷகீல் சதமடித்து அசத்தினார். அவர் 223 பந்துகளில் 134 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். 134 ரன்களில் வெறும் 20 ரன்களை மட்டுமே அவர் பவுண்டரிகள் மூலம் எடுத்தார். 114 ரன்களை ஓடியே எடுத்தார்.

பந்துவீச்சில் அசத்தி வரும் சுழற்பந்துவீச்சாளர்களான சாஜித் கான் மற்றும் நோமன் அலி இருவரும் பேட்டிங்கிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நோமன் அலி 84 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். சாஜித் கான் 48 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இறுதியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 344 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து தரப்பில் ரிஹான் அகமது 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகளையும் மற்றும் ஜாக் லீச் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

தடுமாறும் இங்கிலாந்து

இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

Story image

படம் | AP

ஜோ ரூட் 5 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி பாகிஸ்தானைக் காட்டிலும் 53 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.