நியூசிலாந்துக்கு எதிரான வரலாற்று டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர்களிடம் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை வெல்வது இதுவே முதல் முறையாகும்.
யாருடைய திறமை மீதும் சந்தேகம் இல்லை
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தோல்விக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, யாருடைய திறமை மீதும் எந்தவொரு சந்தேகமும் இல்லை எனவும், பேட்ஸ்மேன்கள் அவர்களது திட்டங்கள் மீது நம்பிக்கை வைத்து விளையாட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது: நான் யாருடைய திறனையும் சந்தேகப் படவில்லை. இந்த டெஸ்ட் தொடர் தோல்வி குறித்து நான் அதிகம் பேசப் போவதில்லை. ஆனால், பேட்ஸ்மேன்கள் அவர்களது திட்டங்கள் மீது கண்டிப்பாக நம்பிக்கை வைத்து விளையாட வேண்டும். நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் அவர்களது திட்டங்களில் நம்பிக்கை வைத்து விளையாடியது போல இந்திய அணியும் விளையாட வேண்டும்.
இதையும் படிக்க: சிஎஸ்கே இந்த 5 வீரர்களை தக்கவைக்கும்: ஹர்பஜன் சிங்
இந்த டெஸ்ட் தொடர் தோல்வி ஏமாற்றமளிக்கிறது. நாங்கள் எதிர்பார்த்த முடிவு இதுவல்ல. நியூசிலாந்து அணி வீரர்களை பாராட்டியாக வேண்டும். அவர்கள் எங்களைக் காட்டிலும் சிறப்பாக விளையாடினர். நியூசிலாந்து அணியின் சவால்களுக்கு நாங்கள் சரியாக பதிலளிக்கவில்லை. இந்திய அணி பேட்டிங்கில் சரியாக விளையாடி ரன்கள் சேர்க்கவில்லை. போட்டியில் வெற்றி பெற 20 விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேண்டும். ஆனால், பேட்ஸ்மேன்கள் அதற்கு ஏற்றவாறு ரன்கள் குவிக்க வேண்டும்.
டெஸ்ட் தொடரை இழந்தபோதிலும், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். இந்திய அணியின் தோல்விக்கு பந்துவீச்சாளர்களையோ அல்லது பேட்ஸ்மேன்களையோ குறைகூற விரும்பவில்லை. இது அணிக்கு ஏற்பட்ட தோல்வி. இந்திய அணி வான்கடே டெஸ்ட் போட்டியில் தங்களை மேம்படுத்திக் கொண்டு சிறப்பாக விளையாட வேண்டும் என்றார்.
சொந்த மண்ணில் இந்திய அணி கடைசியாக கடந்த 2012-13 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடைசி டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 438 ரன்களுக்கு ஆட்டமிழந்த நியூசிலாந்து!

இங்கிலாந்துக்கு 50% அபராதம்! டெஸ்ட் சாம்பியன்ஷிப் 12 புள்ளிகள் குறைப்பு!
ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மிகவும் முக்கியம்: பயிற்சியாளர்

டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
விடியோக்கள்

”தவறு நடந்துள்ளது!” | செய்தியாளர்களின் சராமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் | TVK

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy



