பிரபல கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் நாடு திரும்பினால் அவரை தேவையில்லாமல் துன்புறுத்தமாட்டோம் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
விடுதலைப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டுவந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக என்று மாணவர்களால் தொடங்கப்பட்டுத் தீவிரமடைந்த போராட்டங்களில் 600-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
வங்கதேசத்தில் பிரபல கிரிக்கெட் வீரராக அறியப்படுபவர் ஷகிப் அல் ஹசன். சிறந்த ஆல் ரவுண்டராக இருக்கும் ஷகிப் இந்தாண்டு ஜனவரியில் அவாமி லீக் கட்சியில் எம்.பி.யாக பதவியேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஷகிப் கைது செய்யப்படுவாரா?
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தப்பி இந்தியா வந்தார். ஷகிப் இந்தப் பிரசனையின்போது கனடாவில் குலோபல் டி20 லீக்கில் விளையாடிக்கொண்டிருந்தார். பின்னர் பாகிஸ்தானுக்கு சென்று 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அபாரமாக விளையாடி வரலாற்று வெற்றி பெற்றனர்.
தற்போது வங்கதேச அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. முதல் டெஸ்டில் சென்னையில் தோல்வியுற்றது. அடுத்த டெஸ்ட் நாக்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கிறது.
சமீபத்தில் வங்கதேசத்தின் சட்ட ஆலோசகர் ஆசிப் நஸ்ரூல், “ஷகிப் மீது ஒரேயொரு வழக்கு மட்டுமே பதியப்பட்டுள்ளது. அநேகமாக அந்த வழக்குகளில் ஷகிப் கைது செய்யப்படமாட்டார் எனத் தெரித்திருந்தார்.
தேவையில்லாமல் துன்புறுத்தப்படமாட்டார்
இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தில் பொறுப்பில் இருக்கும் நபீஸ் கூறியதாவது:
ஷகிப் குறித்து சட்ட ஆலோசகரே தெளிவாக பேசிவிட்டார். வங்கதேச அரசாங்கமும் தேவையில்லாமல் யாரையும் துன்புறத்தக்கூடாதென தெளிவாகக் கூறியுள்ளது.
இடைக்கால அரசு ஷகிப் விவகாரத்தில் தெளிவாக இருக்கிறது. காயம் அல்லது அணியின் தேர்வு விவாகரத்தினால் ஷகிப் வங்கதேசத்தின் சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்காமல் இருக்கலாம். இதைத் தவிர்த்து ஷகிப் ஏன் சொந்த மண்ணில் விளையாடமால் இருக்கிறார் என்பதற்கு எனக்கு வேறு காரணங்கள் தெரியவில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒற்றை இலக்கத்தில் 8 வீரர்கள்..! ஸ்பென்சர் ஜான்சன் அசத்தலால் 109 ரன்களுக்கு சுருண்ட வங்கதேசம்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் வங்கதேச வீரர்கள் முன்னேற்றம்!

அதீத நடிப்புக்கு 50 பைசா குறைக்கப்படும்..! முகமது ரிஸ்வானைக் கேலி செய்த வங்கதேச வீரர்கள்!
ஷான்டோ, நஹித் ராணா அசத்தல்: மிர்பூர் டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




