ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

ஷகிப் அல் ஹசன் நாடு திரும்பினால்... வங்கதேச கிரிக்கெட் வாரியம் கூறியதென்ன?

பிரபல கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் நாடு திரும்பினால் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் பதிலளித்துள்ளது.

ஷகிப் அல் ஹசன்

Published On :24 செப்டம்பர் 2024, 6:40 pm IST

பிரபல கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் நாடு திரும்பினால் அவரை தேவையில்லாமல் துன்புறுத்தமாட்டோம் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

விடுதலைப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டுவந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக என்று மாணவர்களால் தொடங்கப்பட்டுத் தீவிரமடைந்த போராட்டங்களில் 600-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

வங்கதேசத்தில் பிரபல கிரிக்கெட் வீரராக அறியப்படுபவர் ஷகிப் அல் ஹசன். சிறந்த ஆல் ரவுண்டராக இருக்கும் ஷகிப் இந்தாண்டு ஜனவரியில் அவாமி லீக் கட்சியில் எம்.பி.யாக பதவியேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஷகிப் கைது செய்யப்படுவாரா?

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தப்பி இந்தியா வந்தார். ஷகிப் இந்தப் பிரசனையின்போது கனடாவில் குலோபல் டி20 லீக்கில் விளையாடிக்கொண்டிருந்தார். பின்னர் பாகிஸ்தானுக்கு சென்று 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அபாரமாக விளையாடி வரலாற்று வெற்றி பெற்றனர்.

தற்போது வங்கதேச அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. முதல் டெஸ்டில் சென்னையில் தோல்வியுற்றது. அடுத்த டெஸ்ட் நாக்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கிறது.

சமீபத்தில் வங்கதேசத்தின் சட்ட ஆலோசகர் ஆசிப் நஸ்ரூல், “ஷகிப் மீது ஒரேயொரு வழக்கு மட்டுமே பதியப்பட்டுள்ளது. அநேகமாக அந்த வழக்குகளில் ஷகிப் கைது செய்யப்படமாட்டார் எனத் தெரித்திருந்தார்.

தேவையில்லாமல் துன்புறுத்தப்படமாட்டார்

இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தில் பொறுப்பில் இருக்கும் நபீஸ் கூறியதாவது:

ஷகிப் குறித்து சட்ட ஆலோசகரே தெளிவாக பேசிவிட்டார். வங்கதேச அரசாங்கமும் தேவையில்லாமல் யாரையும் துன்புறத்தக்கூடாதென தெளிவாகக் கூறியுள்ளது.

இடைக்கால அரசு ஷகிப் விவகாரத்தில் தெளிவாக இருக்கிறது. காயம் அல்லது அணியின் தேர்வு விவாகரத்தினால் ஷகிப் வங்கதேசத்தின் சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்காமல் இருக்கலாம். இதைத் தவிர்த்து ஷகிப் ஏன் சொந்த மண்ணில் விளையாடமால் இருக்கிறார் என்பதற்கு எனக்கு வேறு காரணங்கள் தெரியவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.