போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

இங்கிலாந்து டி20, ஒருநாள் அணியின் புதிய கேப்டன் ஹாரி புரூக்!

இங்கிலாந்து டி20, ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.

News image

ஹாரி புரூக்..

Updated On :7 ஏப்ரல் 2025, 5:45 pm IST

இங்கிலாந்து டி20, ஒருநாள் அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றில் தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவிய இங்கிலாந்து அணியின்ஜோஸ் பட்லர் தனது கேப்டன் பதவியிலிருந்து விலகினார். இதனால், இங்கிலாந்து அணியின் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு டி20 மற்றும் ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக 26 வயதான இளம்வீரர் ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்தாண்டு நவம்பர் மாதம் ஜெட்டா நகரில் நடைபெற்ற மெகா ஏலத்தில் தில்லி கேப்பிடல்ஸ் அணி, ஹாரி புரூக்கை ரூ.6.25 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. இருப்பினும், அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இதனால், ஐபிஎல் புதிய விதிகளின்படி அவருக்கு 2 ஆண்டுகள் தொடரில் விளையாடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு அறிமுகமானதிலிருந்து டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஹாரி புரூக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அணியின் துணை கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார். மேலும், பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் முச்சதம் விளாசி அசத்தியிருந்தார்.

செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பட்லர் விளையாடாததால், அணியை வழிநடத்திய புரூக் தலைமையிலான இங்கிலாந்து 2-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை அணி மற்றும் யங் லையன்ஸ் அணியின் கேப்டனாக ஹாரி புரூக், இதுவரை 26 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 816 ரன்கள் குவித்திருக்கிறார். அவர் அதிகபட்சமாக 110 ரன்கள் குவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள புரூக் 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து அணியிலும் அங்கம் வகித்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.