அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

சிராஜ்: இந்திய கிரிக்கெட்டின் அகராதியில் இருந்து மறையும் பணிச்சுமை!

பணிச்சுமை குறித்து முன்னாள் இந்திய வீரர் கூறியதாவது...

News image

ஆட்ட நாயகன் விருது வென்ற முகமது சிராஜ். - படம்: ஏபி

Updated On :5 ஆகஸ்ட் 2025, 5:43 pm IST

பணிச்சுமை குறித்து முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், “சிராஜ் பந்துவீச்சினால் இனிமேலாவது இந்த வார்த்தை இந்திய கிரிக்கெட்டின் அகராதியிலிருந்து மறையுமென நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியின் கடைசி டெஸ்ட்டில்  முதல் இன்னிங்ஸில் 4, இரண்டாம் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை 2-2 என சமன்படுத்தியது. பும்ரா பணிச்சுமை எனக் கூறி 2 போட்டிகளில் விளையாடவில்லை.

இந்தத் தொடரில் சிராஜ் 5 போட்டிகளில் 185.3 ஓவர்கள் வீசி 23 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

வலிகளை மறந்துவிடுங்கள்

சிராஜ் பணிச்சுமை குறித்து எப்போதும் குறை சொன்னதில்லை. ஆனால், பும்ரா அதைக் குறிப்பிட்டு பல போட்டிகளில் விளையாடுவதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் பேசியதாவது:

இந்தியாவுக்காக விளையாடும்போது வலி, வேதனைகளை மறக்க வேண்டும்.

எல்லையில் இராணுவ வீரர்கள் குளிர் குறித்து குறை சொல்கிறார்களா? ரிஷப் பந்த் என்ன செய்தார்? கால் உடைந்தும் பேட்டிங் செய்தார். அதைத்தான் வீரர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

சிராஜ் முன்னுதராணம்

140 கோடி மக்கள் கொண்ட இந்தியாவை நீங்கள் பிரதிநிதிப்படுத்தி விளையாடுகிறீர்கள். அதைதான் சிராஜிடம் காண்கிறோம்.

சிராஜ் தனது ஒட்டுமொத்த உழைப்பையும் வழங்கி பந்து வீசிகிறார். அவர் எப்போதும் பணிச்சுமை எனக் கூறுவதில்லை.

5 டெஸ்ட் போட்டிகளில் 7-8 ஓவர்கள் கொண்ட ஸ்பெல் வீசுகிறார். ஏனெனில் கேப்டன் வேண்டுமென நினைக்கிறார். நாடும் அவரை நம்புகிறது.

பணிச்சுமை என்பது மனரீதியானது

பணிச்சுமை எனப் பேசுபவர்களை நீங்கள் ஆதரித்தால் உங்களுக்கு ஃபீல்டிங்கில் சிறப்பானவர்கள் கிடைக்கவே மாட்டார்கள்.

இந்திய கிரிக்கெட்டின் அகராதியில் இருந்து பணிச்சுமை என்ற வார்த்தையே மறைந்துபோகும் என நம்புகிறேன். நான் இதை பலகாலமாக சொல்லி வருகிறேன்.

பணிச்சுமை என்பது உடல் ரீதியானது அல்ல, மனரீதியானது என்பதை நாம் அனைவரும் கவனித்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

Summary

Mohammed Siraj has "debunked forever this business of workload", said India batting great Sunil Gavaskar, questioning the concept by asserting that playing for the country should be enough to "forget the aches", something that soldiers guarding the nation are doing routinely.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.