தவெக எம்.எல்.ஏ.விடம் ரூ. 35 கோடி பேரம்! செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் 3 பேர் கைது!தவெகவுக்கான ஆதரவில் கடுக்களவு குந்தகமும் ஏற்படாது! இடதுசாரிகள் முதல்வர் விஜய் குறித்து அவதூறு!அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு! முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

இந்திய மாலுமியின் உடலில் இதயம், மூளை, நுரையீரல் மாயம்! பதில் கோரும் குடும்பம்

இந்திய மாலுமியின் உடலில் இதயம், மூளை, நுரையீரல் மாயமாகியிருப்பது குறித்து விளக்கம் கேட்கிறது அவரது குடும்பம்

News image
Updated On :1 ஜூலை 2026, 1:27 pm IST

வெனிசுவேலாவில் கடந்த மே மாதம் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த இந்திய மாலுமியின் உடல் தாயகம் திரும்பிய நிலையில், அதில், இதயம், மூளை, நுரையீரல் போன்ற உறுப்புகள் மாயமாகியிருப்பது குறித்து குடும்பத்தினர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராகேண் சௌஹான் உடல், இந்தியாவில் மீண்டும் உடல் கூராய்வு செய்யப்பட்டபோது, உடலில், முக்கிய உறுப்புகள் மாயமாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசு, வெனிசுவேலா தூதரகத்தைத் தொடர்புகொண்டு கேட்டறியுமாறு குடும்பத்தினர் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

மேலும், ராகேஷின் உடல்கூராய்வு முடிவுகள் எதையும் வெனிசுவேலா வெளியிடவில்லை, உடலுடன் அனுப்பிவைக்கவும் இல்லை என்பதால், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் தகவலில், ராகேஷ் உடலில், இதயம், மூளை, நுரையீரல், கணையம், கல்லீரல், சிறுநீரகங்கள் என எந்த முக்கிய பாகங்களும் இல்லை. உடலில் ஏராளமான தையல்கள் போடப்பட்டிருந்தன. ஒரு காதிலிருந்து மற்றொரு காது வரை 21 தையல்களும், கழுத்திலிருந்து 22 தையல்களும் போடப்பட்டிருக்கின்றன.

ஒரு மாதத்துக்கும் மேல் குளிர்நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு உடல் பாகமும் இல்லாததால், மரணத்துக்கான காரணத்தைக் கண்டறியவே முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.