ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

சஞ்சு சாம்சனுக்கு அறுவைச் சிகிச்சை! ஐபிஎல்லில் பங்கேற்பாரா?

சஞ்சு சாம்சனுக்கு அறுவைச் சிகிச்சை! ஐபிஎல்லில் பங்கேற்பாரா? என்பது குறித்து...

News image
Updated On :12 பிப்ரவரி 2025, 2:01 pm

சஞ்சு சாம்சனுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

இந்திய டி20 அணியின் விக்கெட் கீப்பரும் ராஜஸ்தான் அணியின் கேப்டனுமான சஞ்சு சாம்சனுக்கு கைவிரலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? என்பது குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியிலும் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான 5 வது டி20 போட்டியின்போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து சஞ்சு சாம்சனின் வலது ஆள்காட்டி விரலில் பலமாகத் தாக்கியது. இதனால், வெளியேறிய சாம்சனுக்குப் பதிலாக துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பிங் பணியை கவனித்தார்.

அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு சாம்சன் குணமடைய ஒரு மாதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஐபிஎல்லில் பங்கேற்க சரியான நேரத்தில் அவர் உடல் தகுதி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

ஐபிஎல் போட்டிகள் வருகிற மார்ச் 21 ஆம் தேதி தொடங்கும் என்று முதல் கட்ட தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், அவரின் காயம் இன்னும் 5 வாரங்களில் குணமடையுமா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

கேரள அணிக்காகவும் விளையாடிவரும் சஞ்சு சாம்சன் இந்தக் காயத்தால் ரஞ்சி தொடரின் காலிறுதிப் போட்டியில் ஜம்மு-காஷ்மீருக்கு எதிரான போட்டியிலும் விளையாட முடியாமல் போனது.

மார்ச் 23 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடுவார் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், மும்பையில் நடந்த சிறப்புப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சுக்லா, செய்தியாளர்களிடம் பேசுகையில் ஐபிஎல் தேதியையும் வெளியிட்டார். இருப்பினும், சஞ்சு சாம்சனின் காயம் குறித்து பிசிசிஐ எந்தத் தகவல்களையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.