சிட்னி டெஸ்ட்டில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 வது மற்றும் கடைசிப் போட்டி நாளை(ஜன.3) சிட்னியில் நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே நடைபெற்ற 4 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்ற நிலையில், ஒரு போட்டி டிராவில் முடிந்தது. இதனால், தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருக்கிறது.
போட்டிக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து முதுகு வலி காரணமாக விலகுவதாக தெரிவித்தார்.
ஆகாஷ் தீப்புக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய முன்னணி வீரர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டதால் அவருக்குப் பதிலாக ஆகாஷ் தீப் அறிமுகமானார். 5 போட்டிகளில் ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அணியில் சேர்க்கப்பட்ட ஆகாஷ் தீப், சிறப்பாக பேட்டிங் செய்ததுடன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அடுத்த போட்டியான மெல்பர்ன் டெஸ்ட்டில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் தொடரிலிருந்து ஆகாஷ் தீப் விலகல்?
சிஎஸ்கேவுக்கு பின்னடைவு.. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் விலகல்!
தொடரும் சாதனைப் பயணம்!

மகளிா் டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி! 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


