விராட் கோலி விக்கெட்டை வீழ்த்திய போலண்ட்.
விராட் கோலி விக்கெட்டை வீழ்த்திய போலண்ட். படம்: ஏபி

போலண்ட் 4 விக்கெட்டுகள்: இந்தியா 145 ரன்கள் முன்னிலை!

சிட்னி டெஸ்ட்டில் 2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 145 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.
Published on

சிட்னி டெஸ்ட்டின் 2ஆம் நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 145 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.

பார்டர் - கவாஸ்கர் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 185க்கு ஆல் அவுட்டாக ஆஸி. 181க்கு ஆல் அவுட்டானது.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 2ஆம் நாள் முடிவில் 32 ஓவர்கள் விளையாடி 141/6 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 4 ரன்கள் கூடுதலாக இருந்ததால் இந்திய அணி 145 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.

இந்திய அணியின் ஸ்கோர் கார்ட்

ஜெய்ஸ்வால் - 22

கே.எல்.ராகுல் - 13

ஷுப்மன் கில் - 13

விராட் கோலி - 6

ரிஷப் பந்த் - 61

ரவிந்திர ஜடேஜா - 8*

நிதீஷ் ரெட்டி - 4

வாஷிங்டன் சுந்தர் - 6*

ஆஸி. அணி 2-1 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணி இந்தப் போட்டியில் வென்றால் 2-2 என தொடர் சமநிலையில் முடியும். பிஜிடி தொடரும் இந்தியாவின் வசம் தக்கவைக்கப்படும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கும் இந்தியாவுக்கு வாய்ப்பிருக்கிறது. இதில் தோல்வியுற்றால் அனைத்துமே இந்திய அணி இழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com