மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு ஆதரவாக பேசிய ஜாண்டி ரோட்ஸ்!

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஆதரவாக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஜாண்டி ரோட்ஸ் பேசியுள்ளார்.

News image
விராட் கோலி, ரோஹித் சர்மா- படம் | AP
Updated On :11 ஜனவரி 2025, 2:55 pm

DIN

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஆதரவாக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஜாண்டி ரோட்ஸ் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்த டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த டெஸ்ட் தொடர் முழுவதுமே இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படத் தவறினர். குறிப்பாக, மூத்த வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சிக்கத் தொடங்கினர். அதிலும் குறிப்பாக, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு ஆதரவு

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இழந்ததற்காக இரண்டு பேரை மட்டும் கடுமையாக விமர்சிப்பது நியாயமில்லை என அவர்களுக்கு ஆதரவாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் பேசியுள்ளார்.

ஜாண்டி ரோட்ஸ் (கோப்புப் படம்)

ஜாண்டி ரோட்ஸ் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அனைவருக்கும் அவர்களது கருத்துகளை கூறுவதற்கு உரிமை இருக்கிறது. இந்த நவீன காலத்தில் கிரிக்கெட் வீரர்கள் பொதுமக்களின் பார்வையிலிருந்து தப்பிக்க முடியாது. ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான வீரர்களை கொண்டாடுவதாக இருக்கட்டும் அல்லது சரியாக விளையாடாத வீரர்களை விமர்சிப்பதாக இருக்கட்டும். சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி ரசிகர்கள் அவர்களது கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைக்கின்றனர். அனைவரும் கிரிக்கெட்டில் அனுபவசாலிகள் போன்று தெரிகிறார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது மிகவும் கடினம். இந்திய அணி கடந்த இரண்டு சுற்றுப்பயணங்களின் போதும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியதை இந்திய ரசிகர்கள் மறந்துவிட்டதாக நினைக்கிறேன். இந்த முறை இந்திய அணியால் தொடரை வெல்ல முடியவில்லை. அதற்காக வெறும் இரண்டு பேரை (ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி) மட்டும் கடுமையாக விமர்சிப்பது எப்படி சரியாகும். தொடரை இழந்ததற்கு இரண்டு பேர் மீது மட்டுமே பழி சுமத்தப்படுகிறது என்றார்.

முன்னதாக, இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஆதரவாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.