இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பும்ரா விளையாட மாட்டார்: அஜித் அகர்கர்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என அணித் தேர்வுக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

News image

ஜஸ்பிரித் பும்ரா (கோப்புப் படம்) - படம் | ஐசிசி

Updated On :18 ஜனவரி 2025, 5:31 pm IST

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜனவரி 18) அறிவித்துள்ளது. 15 பேர் கொண்ட இந்த அணியை கேப்டன் ரோஹித் சர்மா வழிநடத்துகிறார். துணைக் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடவில்லை. தசைப் பிடிப்பால் அவதிப்பட்டு வரும் பும்ரா, முழு உடல்தகுதி பெறுவதற்கான சிகிச்சையில் உள்ளார்.

ஜஸ்பிரித் பும்ரா இல்லை

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெற்றுள்ள போதிலும், முதல் இரண்டு போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு 5 வாரங்கள் ஓய்வு தேவைப்படுகிறது. அவர் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட மாட்டார். அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் அவரது உடல் தகுதி குறித்த விவரங்கள் தெரியவரும் என்றார்.

இந்திய அணி பிப்ரவரி 6,9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதன் பின், பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.