லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த ஆண்டின் இறுதியில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த், ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அவரை லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
கேப்டன் ரிஷப் பந்த்
ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ரிஷப் பந்த், தற்போது அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
லக்னௌ அணியின் புதிய கேப்டன் ரிஷப் பந்த்தை உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன் என லக்னௌ அணியின் உரிமையாளர் கோயங்கா தெரிவித்துள்ளார்.
லக்னௌ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து ரிஷப் பந்த் பேசியதாவது: நான் எனது 200 சதவிகித உழைப்பைக் கொடுப்பேன். அணிக்கு கோப்பையை வென்றுத் தருவதே எனது நோக்கம். என்மீது அணி நிர்வாகம் வைத்துள்ள நம்பிக்கையை என்னால் முடிந்த அளவுக்கு காப்பாற்றுவேன். புதிய தொடக்கத்துக்காக காத்திருக்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிளே ஆஃப் போட்டியிலிருந்து வெளியேறிய லக்னௌ, மும்பை; விறுவிறுப்பாகும் ஐபிஎல் தொடர்!

ரிஷப் பந்த் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்: லக்னௌ பயிற்சியாளர்

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

ரிஷப் பந்த் பொறுப்புடன் விளையாட வேண்டும்: முகமது கைஃப்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



