தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

“12 விக்கெட்டுகள்...” ரஞ்சி போட்டியில் ரவீந்திர ஜடேஜா அபாரம்!

ரஞ்சி போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

News image

ரவீந்திர ஜடேஜா (கோப்புப் படம்)

Updated On :24 ஜனவரி 2025, 3:12 pm

ரஞ்சி போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் உள்பட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பலரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனையடுத்து, இந்திய வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதன் படி, இந்திய வீரர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாடி வருகின்றனர்.

ரவீந்திர ஜடேஜா அபாரம்

இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா, தில்லிக்கு எதிரான போட்டியில் சௌராஷ்டிர அணிக்காக களமிறங்கினார்.

இந்தப் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரது அபார பந்துவீச்சில் தில்லி அணி முதல் இன்னிங்ஸில் 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜடேஜாவின் அபார பந்துவீச்சு இரண்டாவது இன்னிங்ஸிலும் தொடர்ந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் அவர் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து ரவீந்திர ஜடேஜா 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில் சௌராஷ்டிர அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

ரஞ்சி கோப்பையில் இடம்பெற்று விளையாடி வரும் இந்திய அணியின் மூத்த வீரர்கள் பலரும் பெரிதாக சோபிக்காத நிலையில், ரவீந்திர ஜடேஜா சிறப்பாக செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.