ரஞ்சி போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் உள்பட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பலரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனையடுத்து, இந்திய வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதன் படி, இந்திய வீரர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாடி வருகின்றனர்.
இதையும் படிக்க: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ரவீந்திர ஜடேஜா அபாரம்
இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா, தில்லிக்கு எதிரான போட்டியில் சௌராஷ்டிர அணிக்காக களமிறங்கினார்.
இந்தப் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரது அபார பந்துவீச்சில் தில்லி அணி முதல் இன்னிங்ஸில் 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜடேஜாவின் அபார பந்துவீச்சு இரண்டாவது இன்னிங்ஸிலும் தொடர்ந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் அவர் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து ரவீந்திர ஜடேஜா 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்தப் போட்டியில் சௌராஷ்டிர அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
ரஞ்சி கோப்பையில் இடம்பெற்று விளையாடி வரும் இந்திய அணியின் மூத்த வீரர்கள் பலரும் பெரிதாக சோபிக்காத நிலையில், ரவீந்திர ஜடேஜா சிறப்பாக செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லார்ட்ஸ் டெஸ்ட்: 270 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த கேப்டன்கள் வரிசையில் இணைந்த ஷ்ரேயாஸ் ஐயர்!
விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வி; இந்திய அணியின் கேப்டன் கூறுவதென்ன?
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



