மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்பு
/

2024-ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனை விருதை வென்ற நியூசி. ஆல்ரவுண்டர்!

டி20 போட்டிகளில் கடந்த ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கான ஐசிசி விருதினை நியூசிலாந்து ஆல்ரவுண்டர் மெலி கெர் வென்றுள்ளார்.

News image

மெலி கெர் (கோப்புப் படம்) - படம் | ஐசிசி

Updated On :25 ஜனவரி 2025, 7:52 pm IST

டி20 போட்டிகளில் கடந்த ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கான ஐசிசி விருதினை நியூசிலாந்து ஆல்ரவுண்டர் மெலி கெர் வென்றுள்ளார்.

கடந்த ஆண்டு முழுவதும் சர்வதேச டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீராங்கனைகள் ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான போட்டியில் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில், நியூசிலாந்து ஆல்ரவுண்டர் மெலி கெர் கடந்த ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதினை வென்றுள்ளார்.

நியூசிலாந்து அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு மெலி கெர் முக்கியப் பங்கு வகித்தார். கடந்த ஆண்டில் 18 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 387 ரன்களும், 29 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர் ஒன்றில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீராங்கனை என்ற பெருமையும் அவரையேச் சேரும்.

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதினை வெல்லும் இரண்டாவது நியூசிலாந்து வீராங்கனை மெலி கெர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.