திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

விராட் கோலியை கௌரவித்த தில்லி கிரிக்கெட் சங்கம்; எதற்காக?

இந்திய அணியின் விராட் கோலியை தில்லி கிரிக்கெட் சங்கம் கௌரவித்துள்ளது.

News image

விராட் கோலி (கோப்புப் படம்)

Updated On :31 ஜனவரி 2025, 9:58 pm IST

இந்திய அணியின் விராட் கோலியை தில்லி கிரிக்கெட் சங்கம் கௌரவித்துள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான விராட் கோலி தற்போது தில்லி அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடி வருகிறார். ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் தில்லி அணிக்காக விளையாடி வருகிறார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விராட் கோலி 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இரண்டாம் நாள் முடிவில் தில்லி அணி ரயில்வேஸ் அணியைக் காட்டிலும் 93 ரன்கள் முன்னிலை பெற்றது.

விராட் கோலிக்கு பாராட்டு

இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதை பாராட்டும் விதமாக விராட் கோலியை தில்லி கிரிக்கெட் சங்கம் கௌரவித்துள்ளது.

விராட் கோலி கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன் பின், அவர் 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த நிலையில், தற்போது விராட் கோலியை தில்லி கிரிக்கெட் சங்கம் கௌரவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக தில்லி கிரிக்கெட் சங்கம் சார்பில் தெரிவித்திருப்பதாவது: விராட் கோலியை கௌரவிக்கும் இந்த நிகழ்வு நீண்ட காலமாக கிடப்பில் இருந்தது. தற்போது, விராட் கோலி தில்லியில் இருப்பதால், அவரை கௌரவிக்க வேண்டுமென நினைத்தோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சி கோப்பை தொடரில் ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவடைந்த பிறகு, தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவர் ரோஹன் ஜெட்லி, விராட் கோலிக்கு நினைவுப் பரிவு மற்றும் பொன்னடையை வழங்கினார்.

விராட் கோலியை தவிர்த்து, தில்லியிலிருந்து இஷாந்த் சர்மா மற்றும் வீரேந்திர சேவாக் இருவரும் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.