ஷுப்மன் கில் அபாரம்; முதல் இன்னிங்ஸில் 587 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
shubman gill
ஷுப்மன் கில்படம் | பிசிசிஐ
Published on
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 2) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

இரட்டை சதம் விளாசிய ஷுப்மன் கில்

முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 310 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்கள், கருண் நாயர் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். ஷுப்மன் 114 ரன்களுடனும் ரவீந்திர ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், இன்று (ஜூலை 3) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியது முதலே கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். ரவீந்திர ஜடேஜா அரைசதம் கடந்து அசத்தினார். இருப்பினும், அவர் 89 ரன்களில் ஜோஷ் டங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

இதனையடுத்து, கேப்டன் ஷுப்மன் கில்லுடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இரண்டாம் நாளின் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய கேப்டன் ஷுப்மன் கில் டெஸ்ட் போட்டிகளில் அவரது முதல் இரட்டை சதத்தைப் பதிவு செய்தார். நிதானமாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஷுப்மன் கில் 387 பந்துகளில் 269 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 30 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

269 ரன்கள் எடுத்ததன் மூலம், இந்திய அணியின் கேப்டனாக டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸ் ஒன்றில் அதிகபட்ச ரன்கள் குவித்து ஷுப்மன் கில் சாதனை படைத்துள்ளார்.

இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோஷ் டங் தலா 2 விக்கெட்டுகளையும், பிரைடான் கார்ஸ், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோ ரூட் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

In the second Test against England, the Indian team was bowled out for 587 runs in the first innings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com