2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இலங்கைக்கு 249 ரன்கள் இலக்கு!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேசம் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இலங்கைக்கு 249 ரன்கள் இலக்கு!
படம் | AP
Published on
Updated on
1 min read

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேசம் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (ஜூலை 5) கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

இருவர் அரைசதம்; 249 ரன்கள் இலக்கு

முதலில் விளையாடிய வங்கதேசம் 45.5 ஓவர்களின் முடிவில் 248 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக பர்வேஸ் ஹொசைன் 69 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, தௌஹித் ஹிரிடாய் 51 ரன்களும், தன்சிம் ஹாசன் சாகிப் 33* ரன்களும் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் அஷிதா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். வனிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகளையும், துஷ்மந்தா சமீரா மற்றும் சரித் அசலங்கா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.

Summary

Bangladesh were bowled out for 248 runs in the second ODI against Sri Lanka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com