ஐந்து பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற அசத்தலான சாதனையை அயர்லாந்து வீரர் கர்டிஸ் கேம்பர் படைத்துள்ளார்.
அயர்லாந்தில் மாகாணங்களுக்கு இடையேயான டி20 டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த தொடரில் நார்த் வெஸ்ட் வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முன்ஸ்டர் ரெட்ஸ் அணிக்காக விளையாடிய கர்டிஸ் கேம்பர், தொடர்ச்சியாக ஐந்து பந்துகளில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
ஆடவர் கிரிக்கெட்டில் ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட்டுகளை தொடர்ச்சியாக ஒருவர் கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு மகளிருக்கான உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரில் ஈகிள்ஸ் வுமன் அணிக்கு எதிராக ஜிம்பாப்வே வீராங்கனை கெலிஸ் தொடர்ச்சியாக ஐந்து பந்துகளில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
நார்த் வெஸ்ட் வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கர்டிஸ் கேம்பர் இரண்டு ஓவர்களில் தொடர்ச்சியாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த அரிய சாதனையை படைத்தார். அவர் வீசிய 12-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் விக்கெட் கைப்பற்றினார். அதற்கு அடுத்த பந்திலும் விக்கெட்டினை கைப்பற்றினார்.
அதன் பின், அவர் வீசிய அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம், இரண்டு ஓவர்களில் தொடர்ச்சியாக 5 பந்துகளில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அவர் சாதனை படைத்தார்.
Summary
The Irish player has set an incredible record by becoming the first player to take 5 wickets in five balls.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆப்கனுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி!
இங்கிலாந்து, அயர்லாந்து தொடரிலிருந்து சிராஜ் விடுவிப்பு.. மாற்று வீரர் இவரா?

60 விக்கெட்டுகள் வீழ்த்தியவருக்கு அணியில் இடமில்லையா? ஆகிப் நபிக்கு பயிற்சியாளர் ஆதரவு!







