மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ஐசிசி தரவரிசை: ஸ்மிருதி மந்தனாவை முந்தி இங்கிலாந்து கேப்டன் முதலிடம்!

மகளிர் கிரிக்கெட் ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து கேப்டன் குறித்து...

News image

ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பிடித்த இங்கிலாந்து கேப்டன். - படம்: ஐசிசி

Updated On :29 ஜூலை 2025, 4:09 pm IST

மகளிர் கிரிக்கெட் ஐசிசி தரவரிசையில் ந்தியாவின் ஸ்மிருதி மந்தனாவை முந்தி, இங்கிலாந்து கேப்டன் நாட் ஷிவர் பிரன்ட் முதலிடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய இந்திய மகளிரணி டி20, ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்தது.

இந்தத் தொடரி இங்கிலாந்து அணி தோல்வியுற்றாலும் அதன் கேப்டன் நாட் ஷிவர் பிரன்ட் சிறப்பாக விளையாடினார்.

இந்தியாவுக்கு எதிரான இந்த மூன்று ஒருநாள் போட்டிகளில் முறையே அவர் 41, 21 98 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில், மகளிருக்கான புதிய ஐசிசி தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூலை 29) வெளியானது.

இதில், 32 வயதாகும் இங்கிலாந்து கேப்டன் இரண்டு இடங்கள் முன்னேறி முதலிடம் பிடித்துள்ளார்.

இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா ஓரிடம் பின்தங்கி இரண்டாம் இடம் பிடித்தார்.

மகளிர் ஒருநாள் ஐசிசி பேட்டர்கள் தரவரிசை

1. நாட் ஷிவர் பிரன்ட் - 731 புள்ளிகள்

2. ஸ்மிருதி மந்தனா - 728 புள்ளிகள்

3. லாரா வொல்வார்ட் - 725 புள்ளிகள்

4. எல்லீஸ் பெர்ரி - 684 புள்ளிகள்

5. அலீஸா ஹுலி - 679 புள்ளிகள்

Summary

England captain Nat Sciver-Brunt displaced star India batter Smriti Mandhana from No.1 spot in the latest ICC Women's ODI Player Rankings released here on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.