
இந்தியாவின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா ஓவல் டெஸ்ட்டில் விளையாடமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.
மான்செஸ்டர் டெஸ்ட்டில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி தோல்வி அடையாமல் சமனில் முடித்தது.
கடைசி டெஸ்ட்டாக ஓவல் டெஸ்ட் ஜூலை 31-இல் நடைபெறவிருக்கிறது.
வேலைப் பளு காரணமாக ஜஸ்ப்ரீத் பும்ரா கடைசி டெஸ்ட்டில் விளையாடமாட்டார் எனக் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக ஆகாஷ் தீப் விளையாடுவாரென தகவல் வெளியாகியுள்ளது.
31 வயதாகும் பும்ரா 48 டெஸ்ட்டில் 219 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 140கி.மீ./மணி வேகத்தில் பந்துவீசும் பும்ராவின் திறனும் படிப்படியாக குறைந்துவருவது குறிப்பிடத்தக்கது.
பிசிசிஐ குழுவிடமிருந்து இஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோவிற்கு கிடைத்த தகவலின்படி, “பிசிசிஐ மருத்துவக் குழு பும்ராவின் நீண்டநாள் உடல்நலன் கருதி கடைசி டெஸ்ட்டில் விளையாட வேண்டாம் எனப் பரிந்துரைந்துள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கம்பீர், “கடைசி டெஸ்ட்டுக்கான பிளேயிங் லெவனை இன்னும் இறுதியாக்கவில்லை. யார் யார் இருந்தால் நன்றாக இருக்கும் என யோசித்து வருகிறோம்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.