சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற அடுத்த நாளே நியூயார்க் அணியின் புதிய கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான நிக்கோலஸ் பூரன், தனது 29 வயதிலேயே அனைத்துவிதமான சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இந்த திடீர் முடிவுக்கான காரணங்கள் குறித்து பூரன் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் தொடருக்கான நியூயார்க் அணியின் புதிய கேப்டனாக பூரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான ரிலையன்ஸ் நிறுவனத்தின் மற்றொரு அணியாக இந்த நியூயார்க் அணி இருக்கிறது.
ஐபிஎல்லில் லக்னௌ அணிக்கு விளையாடிவரும் நிக்கோலஸ் பூரன், லீக் போட்டிகளில் மிகவும் ஆபத்தான வீரராக கருதப்படுகிறார். இவர் இந்தாண்டு ஐபிஎல் தொடரிலேயே 40 சிக்ஸர்கள் விளாசியிருந்தார். மேலும், சிபிஎல், எம்எல்சி தொடர்களிலும் விளையாடி வருகிறார்.
2023 ஆம் ஆண்டில் எம்எல்சி தொடரில் அதிக ரன்களை(388) குவித்திருந்தார் பூரன். நிகழாண்டுக்கான தொடர் வருகிற வியாழக்கிழமை தொடங்கவிருக்கிறது. எம்ஐ நியூயார்க் அணியில் குயிண்டன் டிக்காக், பொல்லார்ட், ரஷீத்கான் என நட்சத்திர பட்டாளமே குவிந்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அதிக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனையுடன் 2275 ரன்கள் குவித்துள்ளார். மேலும், 61 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1983 ரன்கள் குவித்திருக்கிறார். ஆனால், அவர் ஒரு டெஸ்ட் போட்டியில்கூட விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#NYC Fam, thereâs a new commander in town - ððð©ððð¢ð§ ðð¢ðð¡ð¨ð¥ðð¬ ðð¨ð¨ð«ðð§! ð#OneFamily #MINewYork #MLC2025 pic.twitter.com/CgCE5RfbY1
— MI New York (@MINYCricket) June 10, 2025
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேப்டனாக முதல் டி20 தொடர் வெற்றி; ஷ்ரேயாஸ் ஐயர் பேசியதென்ன?

ரோஹித் சர்மா ஓய்வு... லார்ட்ஸ் போட்டிதான் கடைசி ஆட்டமா?

ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக தனக்கான அடையாளத்தை உருவாக்க வேண்டும்: முன்னாள் வீரர்

மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமனம்!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



