தன்னுடைய சதங்களை தவறவிட்டிருக்கக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேசியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சௌரவ் கங்குலி இந்திய அணிக்காக 311 ஒருநாள் மற்றும் 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 18, 575 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் என அவர் மொத்தமாக 38 சதங்கள் விளாசியுள்ளார்.
இந்த நிலையில், தன்னுடைய கிரிக்கெட் பயணத்தில் பல்வேறு சதங்களை தவறவிட்டு விட்டதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பிடிஐ நிறுவனத்தின் கலந்துரையாடலில் அவர் பேசியதாவது: நான் நிறைய சதங்களை தவறவிட்டு விட்டேன். அந்த சதங்களை எல்லாம் நான் அடித்திருக்க வேண்டும். நிறைய முறை 90+ ரன்கள் மற்றும் 80+ ரன்களில் ஆட்டமிழந்துள்ளேன். நான் தனியாக இருக்கும்போது, என்னுடைய பேட்டிங் விடியோக்களை பார்ப்பேன். என்னுடைய மனைவி இல்லாதபோது, நான் யூடியூபில் சென்று என்னுடைய பழைய பேட்டிங் விடியோக்களைப் பார்த்து, இந்தப் போட்டியில் சதம் அடித்திருக்க வேண்டும் எனக் கூறிக் கொள்வேன். ஆனால், கடந்த காலத்தை மாற்ற முடியாது என்றார்.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 90+ ரன்கள் மற்றும் 80+ ரன்களில் சௌரவ் கங்குலி, 30 முறை ஆட்டமிழந்துள்ளார். அந்தப் போட்டிகளில் எல்லாம் கங்குலி சதம் விளாசியிருந்தால், அவர் தற்போது சர்வதேசப் போட்டிகளில் 50-க்கும் அதிகமான சதங்களுக்கு சொந்தக்காரராக இருந்திருப்பார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவின் எதிர்காலம் என்ன?

சிஎஸ்கேவுக்கு கவலையளிக்கும் விஷயம் இது மட்டும்தான்; முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?

விளையாட்டுத் துளிகள்...

இந்த ஐபிஎல் சீசனில் ரோஹித் சர்மா அதிரடியில் மிரட்டுவார்: அஸ்வின்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


