காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

இந்தியாவுக்கு எதிராக வரலாறு படைத்த பென் டக்கெட்!

இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் நிகழ்த்திய சாதனை குறித்து...

England's Ben Duckett celebrates after scoring a century on day five of the first cricket test match between England and India at Headingley in Leeds

சதமடித்த மகிழ்ச்சியில் பென் டக்கெட் கொண்டாட்டம்... - படம்: ஏபி

Published On :

இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் இந்தியாவுக்கு எதிராக புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

முதல் இன்னிங்ஸில் இந்தியா 471 சேர்க்க, இங்கிலாந்து 465 சேர்த்தது. இரண்டாம் இன்னிங்ஸில் இந்தியா 364 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வந்தது. அதிலும் பென் டக்கெட் சதம் அடித்து அசத்தலாக விளையாடி வந்தார். ஷர்துல் ஓவரில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணி 58.3 ஓவர்களில் 269/4 ரன்கள் எடுத்துள்ளது. மழை வந்ததால் தேநீர் இடைவேளை விடப்பட்டது.

170 பந்துகளில் பென் டக்கெட் 149 ரன்கள் குவித்தார். இதில் 21 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடங்கும்.

இந்தியாவுக்கு எதிராக சேஸிங்கில் 4-ஆவது இன்னிங்ஸில் அதிகபட்ச ரன்களை குவித்து வரலாறு படைத்துள்ளார்.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள்

149 - பென் டக்கெட் - ஹெடிங்லே, 2025

142* - ஜோ ரூட் - எட்ஜ்பாஸ்டன், 2022

134 - ஃபாப் டு பிளெஸ்ஸி - ஜோபர்க், 2013

124 - துலீப் மெண்டிஸ் - கண்டி , 1985

122* - டேரில் குலினன் - ஜோபர்க், 1997

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.