இந்தியா - ஆஸி. தொடருக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி வருகிற அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 19 ஆம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது. அக்டோபர் 23 மற்றும் அக்டோபர் 25 ஆம் தேதிகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகள் அடிலைடு மற்றும் சிட்னியில் முறையே நடைபெறுகின்றன. அதன் பின், அக்டோபர் 29 முதல் டி20 தொடர் தொடங்குகிறது.
விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான தொடர் தொடங்குவதற்கு இன்னும் 4 மாதங்கள் இருக்கும் நிலையில், போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான இந்த இரண்டு தொடர்களையும் சேர்த்து, 8 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளுக்கு 90,000-க்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாகவும், சிட்னியில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டி மற்றும் கேன்பெராவில் நடைபெறும முதல் டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டிகளுக்கு விற்பனையான மொத்த டிக்கெட்டுகளில் 16 சதவிகித டிக்கெட்டுகளை இந்திய ரசிகர் மன்றங்கள் வாங்கியுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
India's white-ball tour of Australia is still four months away but Cricket Australia (CA) has already more than 90,000 tickets for eight matches with third ODI in Sydney and first Twenty20 in Canberra completely sold out.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலிய அணி!

முதல் ஒருநாள்: மே.இ.தீவுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!

2 வீராங்கனைகள் அரைசதம்..! ஆஸி.க்கு 252 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!
வீடியோக்கள்

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


