கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டுமா? அல்லது இந்திய அணியில் இடம்பெறுவதில் கவனம் செலுத்த வேண்டுமா? என்பது குறித்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் பேசியுள்ளார்.
நியூசிலாந்தை வீழ்த்தி அண்மையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி மூன்றாவது முறையாக வென்றது. சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தபோதிலும், அணியின் பிளேயிங் லெவனில் விளையாடுவதற்கான வாய்ப்பு ரிஷப் பந்த்துக்கு கிடைக்கவில்லை.
ஐபிஎல் தொடரா? இந்திய அணியா?
இந்திய அணி அண்மையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற நிலையில், கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டுமா? அல்லது இந்திய அணியில் இடம்பெறுவதில் கவனம் செலுத்த வேண்டுமா? என்பது குறித்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ஜியோ ஹாட்ஸ்டாரில் ரிஷப் பந்த் பேசியதாவது: சிறுவயதிலிருந்தே எனக்கு இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு மட்டுமே இருந்தது. ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என ஒருபோதும் நான் நினைத்ததில்லை. ஆனால், இன்று வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பதற்கே அதிக கவனம் கொடுப்பதாக நினைக்கிறேன்.
ஐபிஎல் தொடர் வீரர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், வீரர் ஒருவர் தனது நாட்டுக்காக விளையாடுவதை தனது இலக்காக எடுத்துக்கொள்ள வேண்டும். நாட்டுக்கு விளையாடுவதற்கு முன்னுரிமையும், ஐபிஎல் உள்பட மற்ற தொடர்களில் விளையாடுவதை இரண்டாவது தெரிவாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற மிகப் பெரிய இலக்கை வைத்துக் கொண்டால், வெற்றி உங்களை பின் தொடரும். இந்திய அணிக்காக விளையாடுவேன் என்பதை நான் எப்போதும் நம்பினேன். கடவுள் அருளால் எனது நம்பிக்கை வீண்போகவில்லை. என்னுடைய 18 வயதில் இந்திய அணிக்காக விளையாடக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்புக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞா்கள் விளையாட்டுப் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும்! - செளமியா அன்புமணி அறிவுறுத்தல்

குடிநீா் விநியோகம், தூய்மைப் பணியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்

மீண்டும் தில்லி கேபிடல்ஸில் இணைந்த ரிஷப் பந்த்! காரணம் என்ன?







