நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சிறந்த அணியை ஐசிசி இன்று (மார்ச் 10) அறிவித்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. துபையில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இதன் மூலம், 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி கைப்பற்றியது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சிறந்த அணி
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சிறந்த அணியை ஐசிசி இன்று (மார்ச் 10) அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
ஐசிசி அறிவித்துள்ள இந்த அணியில் இந்திய அணியிலிருந்து 6 பேர் இடம்பெற்றுள்ளனர். நியூசிலாந்து அணியிலிருந்து 4 பேரும், ஆப்கானிஸ்தான் அணியிலிருந்து இருவரும் இடம்பெற்றுள்ளனர். இந்த அணிக்கு மிட்செல் சாண்ட்னர் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சிறந்த அணி விவரம்
ரச்சின் ரவீந்திரா, இப்ராஹிம் ஸத்ரான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், கிளன் பிலிப்ஸ், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), முகமது ஷமி, மாட் ஹென்றி, வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்ஷர் படேல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும்; எச்சரிக்கும் ஆஸி. வீராங்கனை!

இளம் இந்தியா்கள் நாடாளுமன்ற நிகழ்வு: சிறந்த மாணவா்களுக்கு விருது

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி!







