‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

தில்லி கேபிடல்ஸின் புதிய கேப்டன் யார்? கே.எல்.ராகுலா? அக்‌ஷர் படேலா?

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படலாம் என்பது குறித்து...

அக்‌ஷர் படேல், கே.எல்.ராகுல்

Published On :10 மார்ச் 2025, 7:50 pm IST

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் அல்லது அக்‌ஷர் படேல் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடவுள்ளது.

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றனர்.

கே.எல்.ராகுலா? அக்‌ஷர் படேலா?

தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பந்த், லக்னௌ அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டார். அதன் பின், அந்த அணியின் கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

லக்னௌ அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கே.எல்.ராகுல் தில்லி கேபிடல்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டார். லக்னௌ அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கே.எல்.ராகுல், தில்லி அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்புக்கு மற்றொரு போட்டியாளராக அந்த அணியில் பல ஆண்டுகளாக விளையாடி வரும் அக்‌ஷர் படேலும் இணைந்துள்ளார். கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு முதல் குழந்தை பிறக்கவுள்ளதால், ராகுல் ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டங்கள் சிலவற்றில் விளையாட முடியாத சூழல் உள்ளது. இதனால், தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்புக்கு அக்‌ஷர் படேல் கடும் போட்டியாளராக உருவெடுத்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளை கேப்டனாக வழிநடத்திய அனுபவம் கே.எல்.ராகுலுக்கு உள்ளது. ஆனால், அக்‌ஷர் படேலுக்கு அணியை வழிநடத்திய அனுபவம் பெரிதாக இல்லை. கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னௌ அணி இரண்டு முறை பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இதுவரை 132 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள கே.எல்.ராகுல் 4,683 ரன்கள் குவித்துள்ளார். அதில் 4 சதங்கள் அடங்கும். கே.எல்.ராகுல் இதுவரை விளையாடியுள்ள 7 ஐபிஎல் தொடர்களில் 6 தொடர்களில் 500-க்கும் அதிகமாக ரன்கள் குவித்துள்ளார்.

31 வயதாகும் அக்‌ஷர் படேல் இதுவரை 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, 1,653 ரன்கள் குவித்துள்ளார். மேலும், 123 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில் அக்‌ஷர் படேலுக்கு கேப்டன் பொறுப்பு என்பது மிகவும் புதிது. ஆனால், கே.எல்.ராகுல் ஐபிஎல் தொடரில் தன்னை கேப்டனாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

இவர்கள் இருவரில் தில்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இன்னும் ஓரிரு நாள்களில் தில்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம், அந்த அணியின் புதிய கேப்டன் யார் என்பதை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.