ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

லக்னௌ அணியில் பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்கவுள்ள ஆஸி. ஆல்ரவுண்டர்!

பிரபல ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் லக்னௌ அணியில் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடவுள்ளார்.

படம் | ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Published On :

பிரபல ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் லக்னௌ அணியில் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடவுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது.

பேட்ஸ்மேனாக மட்டும்...

விரைவில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ், இந்த சீசனில் பேட்டிங் மட்டும் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டனான மிட்செல் மார்ஷ் விரைவில் ஐபிஎல் தொடருக்காக லக்னௌ அணியில் இணையவுள்ளார். காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடாத மிட்செல் மார்ஷ், தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளார்.

காயத்திலிருந்து மீண்டுள்ள மிட்செல் மார்ஷ் லக்னௌ அணிக்காக முன்வரிசையில் இம்பாக்ட் வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆல்ரவுண்டரான மார்ஷ், இந்த சீசனில் பந்துவீச்சில் ஈடுபட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 சீசன்களாக தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிய மிட்செல் மார்ஷ், அடிக்கடி காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக வெறும் 4 போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடினார்.

கடந்த ஆண்டு துபையில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் மிட்செல் மார்ஷ் ரூ.3.40 கோடிக்கு வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.