நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ராகுல் டிராவிட்டுடன் மீண்டும் இணைவது குறித்து மனம் திறந்த சஞ்சு சாம்சன்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராகுல் டிராவிட்டுடன் இணைந்து செயல்படுவது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசியுள்ளார்.

News image

சஞ்சு சாம்சன் (கோப்புப் படம்)

Updated On :14 மார்ச் 2025, 1:40 pm

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராகுல் டிராவிட்டுடன் இணைந்து செயல்படுவது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசியுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் ராகுல் டிராவிட்டுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்து செயல்படவுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட் செயல்பட்டபோது, சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியில் இணைந்தார். தற்போது, ராகுல் டிராவிட் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒன்றாக இணைந்து செயல்படவுள்ளனர். ஆனால், இந்த முறை சஞ்சு சாம்சன் கேப்டனாகவும், ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளர்களாகவும் செயல்படவுள்ளனர்.

மனம் திறந்த சஞ்சு சாம்சன்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ராகுல் டிராவிட்டுடன் இணைந்து செயல்படுவது குறித்து அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசியுள்ளார்.

ராகுல் டிராவிட்டுடன் இணைந்து செயல்படுவது குறித்து சஞ்சு சாம்சன் கூறியதாவது: தற்போது நடக்கும் விஷயங்களை பார்க்கும்போது, மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஐபிஎல் தொடரில் முதல் சீசனில் ராகுல் டிராவிட் தலைமையின் கீழ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடினேன். இளம் வீரருக்கான தேடலில் ஈடுபட்டிருந்த ராகுல் டிராவிட், என்னுடைய அணிக்காக விளையாட முடியுமா எனக் கேட்டார். அவர் கேட்ட அந்த நாள் முதல் இன்று வரை எனக்கு நிறைய மகிழ்ச்சியான தருணங்கள் கிடைத்துள்ளன.

நான் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன். பல ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் மீண்டும் அணியுடன் இணைந்துள்ளார். இது மிகவும் தனித்துவமான மற்றும் சிறப்பான உணர்வைத் தருகிறது. அவர் எப்போதும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அங்கமாக உள்ளார். அவர் மீண்டும் அணியில் இணைந்துள்ளது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் இந்திய அணி என இரண்டிலுமே அவரது தலைமையின் கீழ் விளையாடியுள்ளேன். ஆனால், அவர் தலைமைப் பயிற்சியாளராகவும், நான் கேப்டனாகவும் செயல்படவுள்ளது இதுவே முதல் முறை. இது உண்மையில் மிகவும் சிறப்பான தருணம். ராகுல் டிராவிட்டிடமிருந்து இனி வரும் ஆண்டுகளில் நிறைய கற்றுக்கொள்ள இருக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.