போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

ஐபிஎல்லில் ஆரம்ப சுற்றுப் போட்டிகளைத் தவறவிடும் பும்ரா! மும்பை அணிக்கு பின்னடைவா?

ஐபிஎல் தொடக்கத்தில் பும்ரா பங்கேற்காததால் மும்பை இந்தியன்ஸ் பின்னடைவா..?

News image

ஜஸ்பிரீத் பும்ரா..

Updated On :14 மார்ச் 2025, 6:02 pm IST

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வீரருமான ஜஸ்பிரீத் பும்ரா ஐபிஎல்லில் ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்டர் - கவாஸ்கர் தொடரின் கடைசிப் போட்டியில் பும்ரா, முதுகுவலியால் அவதியடைந்தார். இதனால், போட்டியிலிருந்து விலகிய அவர், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் பங்கேற்கவில்லை. இது இந்திய அணிக்குப் பின்னடைவாகக் கருதப்பட்டாலும், மற்றவீரர்களின் பங்களிப்பால் இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று அசத்தியது.

இந்த நிலையில், 18-வது ஐபிஎல் தொடர் வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. அணி வீரர்களும் அவர்களது அணியில் இணைந்து வருகின்றனர்.

மார்ச் 23 ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் மும்பை அணி தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்ளவிருக்கிறது.

பும்ரா வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தாலும், அவருக்கு ஓய்வு தேவையான ஒன்றாக இருக்கிறது என்று பிசிசிஐயின் பிசியோதெரபி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஐபிஎல்லைத் தொடர்ந்து பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் விளையாடவிருக்கிறார்.

இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் 10-வது இடத்தைப் பிடித்த மும்பை அணிக்கு, முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இல்லாதது பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது. இருப்பினும், அவரைத் தவிர்த்து கேப்டன் ஹார்திக் பாண்டியா, டிரெண்ட் போல்ட், கார்பின் போஸ்ச், தீபக் சாஹர் ஆகியோர் அணியில் உள்ளனர்.

ஏப்ரல் 4 ஆம் தேதி லக்னௌவையும், ஏப்ரல் 7 ஆம் தேதி பெங்களூருவையும் மும்பை அணி எதிர்கொள்ளவிருக்கிறது. இந்தப் போட்டியில் பும்ரா விளையாடுவாரா என்பது இன்னும் உறுதிசெய்யப்படாத நிலையில், அவர் ஏப்ரல் முதல் வாரத்தில் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.