ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

விராட் கோலி ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்த தேவையில்லை: ஏபி டி வில்லியர்ஸ்

விராட் கோலி அவரது ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்த தேவையிருக்காது என முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

News image
விராட் கோலி- படம் | ஐபிஎல்
Updated On :18 மார்ச் 2025, 1:40 pm

DIN

விராட் கோலி அவரது ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்த தேவையிருக்காது என முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

ஏபி டி வில்லியர்ஸ் கூறுவதென்ன?

இன்னும் சில தினங்களில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், விராட் கோலி அவரது ஸ்டிரைக் ரேட்டினை அதிகப்படுத்த தேவையில்லை எனவும், அவர் ஸ்மார்ட்டாக விளையாட வேண்டும் எனவும் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஏபி டி வில்லியர்ஸ் (கோப்புப் படம்)

ஏபி டி வில்லியர்ஸ் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலி கிரிக்கெட்டினை அனுபவித்து விளையாடுவதாக நினைக்கிறேன். அவர் பில் சால்ட்டுடன் விளையாடும்போது, அவரது ஸ்டிரைக் ரேட்டினை அதிகப்படுத்த தேவையிருக்காது என நினைக்கிறேன். நாம் பார்த்ததிலேயே அதிரடியாக விளையாடக் கூடிய ஆட்டக்காரர்களில் ஒருவர் பில் சால்ட். விராட் கோலியின் மீதான அழுத்தத்தை பில் சால்ட் எடுத்துவிடுவார் என நினைக்கிறேன்.

பல ஆண்டுகளாக விராட் கோலி கிரிக்கெட்டில் செய்து வருவதை தொடர்ந்தாலே போதுமானதாக இருக்கும். அவர் ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்து புத்திசாலித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் போதும். அவருக்கு எப்போது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும், எப்போது அதிரடியாக விளையாட வேண்டும் என்பது தெரியும்.

கடந்த சில சீசன்களாக விராட் கோலியின் பேட்டிங்கின் மீது தேவையற்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. வெளியிலிருந்து வரும் விமர்சனங்கள் அவரது ஆட்டத்தில் சிறிதளவாவது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அவரும் மனிதர்தான். அவரது மனதில் சில சந்தேகங்கள் எழுந்திருக்கலாம். ஆனால், விராட் கோலி எப்போதும் அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார். முக்கியமான தருணங்களில் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுத் தந்துள்ளார் என்றார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக தொடர்ச்சியாக அதிக ரன்கள் குவித்து வரும் போதிலும், கடந்த இரண்டு சீசன்களாக விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் மிகப் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.