மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

தெ.ஆ. டெஸ்ட் பயிற்சியாளர் டி20, ஒருநாள் அணிக்கும் பயிற்சியாளராக நியமனம்!

தெ.ஆ. நிர்வாகம் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 அணிகளுக்கும் ஒருவரையே பயிற்சியாளராக நியமித்துள்ளது.

News image

சுக்ரி கான்ராட் - படம்: சிஎஸ்ஏ

Updated On :9 மே 2025, 4:16 pm IST

தெ.ஆ. அணியின் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 அணிகளுக்கும் ஒரே பயிற்சியாளரை நியமித்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணியின் டெஸ்ட் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் 2027 ஐசிசி உலகக் கோப்பை வரைக்கும் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 அணிகளுக்கும் பயிற்சியாளராகத் தொடர்வார் என சிஎஸ்ஏ (தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அசோசியேஷன்) தெரிவித்துள்ளது.

சுக்ரி கான்ராட் தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணிக்காக 2023ஆம் ஆண்டு பயிற்சியாளராக தேர்வானார்.

இவரது தலைமையில் தெ.ஆ. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவுடன் தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டியில் வரும் ஜூன் மாதம் 11ஆம் தேதி மோதவிருக்கிறது.

58 வயதாகும் சுக்ரி கான்ராட் தனது முதல் வெள்ளைப் பந்து பயிற்சியாளராக தெ.ஆ. அணிக்காக வரும் ஜூலையில் ஜிம்பாப்வே உடன் பொறுப்பேற்கிறார்.

டெஸ்ட்டில் சிறப்பாக செயல்பட்டதால் இவருக்கு இந்த வாய்ப்பினை வழங்கியதாகவும் வெள்ளைப் பந்தில் என்ன மாதிரியான மாற்றத்தைக் கொண்டுவருவார் என ஆர்வமாக இருப்பதாகவும் சிஎஸ்ஏவின் இயக்குநர் கூறியுள்ளார்.

கடைசியாக டி20 உலகக் கோப்பையில் தெ.ஆ. அணி இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.