
பிடித்தமானவர்களில் ஒருவர் விராட் கோலி.! புகழாரம் சூட்டிய லெப்டினன்ட் ஜெனரல்!
விராட் கோலிக்கு புகழாரம் சூட்டி லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் பேசியதைப் பற்றி...

விராட் கோலி..
இந்திய வீரர் விராட் கோலி மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர் என்று லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கயி புகழாரம் சூட்டியிருக்கிறார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் பற்றி தலைமை இயக்குநர் லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கயி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவருடன் விமானப்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, கடற்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் வைஸ் அட்மிரல் ஏ. என். பிரமோத் ஆகியோருடம் சேர்ந்து விவரித்தனர்.
#WATCH | Delhi | DGMO Lieutenant General Rajiv Ghai says, "Targetting our airfields and logistics is way too tough... I saw that Virat Kohli has just retired from test cricket; he is one of my favourites. In the 1970s, during the Ashes between Australia and England, two⦠pic.twitter.com/B3egs6IeOA
— ANI (@ANI) May 12, 2025
முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகத் தெரிவித்திருந்தார். இதனை மேற்கோள் காட்டி தலைமை இயக்குநர் லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கயி பேசுகையில், “டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார்.
இந்தியாவில் பலருக்கும் விராட் கோலியைப் பிடித்திருப்பதைப் போல எனக்கும் விராட் கோலியை மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






