காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

இளம் இந்திய அணி இங்கிலாந்தில் சாதிக்குமா? ஏபி டி வில்லியர்ஸ் கூறுவதென்ன?

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள இளம் இந்திய அணி குறித்து தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பேசியுள்ளார்.

News image

ரிஷப் பந்த், ஷுப்மன் கில்

Updated On :31 மே 2025, 4:44 pm IST

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள இளம் இந்திய அணி குறித்து தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பேசியுள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டார். துணைக் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் சாதிக்குமா?

தங்கள் மீது நம்பிக்கை வைத்து விளையாடினால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் இந்திய அணியால் சிறப்பான சாதனையை படைக்க முடியும் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பேசியுள்ளார்.

ஏபி டி வில்லியர்ஸ் (கோப்புப் படம்)

ஏபி டி வில்லியர்ஸ் (கோப்புப் படம்)

இது தொடர்பாக மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது: இளம் வீரர்கள் அணியில் இடம்பெற்று சிறப்பாக செயல்படுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஷுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இந்தியாவில் அதிக அளவிலான திறமைவாய்ந்த வீரர்கள் இருப்பதற்கு, ஐபிஎல் தொடர் மிக முக்கியக் காரணமாக உள்ளது. ஐபிஎல் தொடர் இளம் வீரர்களுக்கு சிறப்பான அனுபவத்தைத் தருகிறது. இந்த ஆண்டு சூர்யவன்ஷி உள்பட பல இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடியதை நாம் பார்த்தோம். ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் இளம் வீரர்கள் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கான பொறுப்பு அதிகரித்துள்ளது. இந்த டெஸ்ட் தொடர் கடினமானதாக இருக்கப் போகிறது. ஆனால், இந்திய அணியில் உள்ள வீரர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். அவர்கள் மீது நம்பிக்கை வைத்து விளையாடினால், அவர்களால் ஏதேனும் சிறப்பான சாதனை படைக்க முடியும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.