மழை நின்றது: பாகிஸ்தான் வெற்றிபெற 113 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான பாகிஸ்தானின் உலகக் கோப்பை போட்டி பற்றி...
Pakistan's team members celebrate the dismissal of England's Sophia Dunkley during the ICC Women's Cricket World Cup match.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பாகிஸ்தான் அணியினர். படம்: ஏபி
Published on
Updated on
1 min read

மகளிர் உலகக் கோப்பையில் இங்கிலாந்து, பாகிஸ்தான் போட்டியில் மழை குறுக்கிட்டது. பின்னர், மழை நின்றதால் போட்டி 31 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

பின்னர், இங்கிலாந்து அணி 31 ஓவர்களில் 133/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சார்லி டீன் 33 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் கேப்டன் ஃபாதிமா சனா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

இலங்கையில் நடைபெறும் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணியின் போட்டி இன்று மதியம் 3 மணிக்குத் தொடங்கியது.

25 ஓவர்களில் இங்கிலாந்து அணி 79 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியதுபோது மழை குறுக்கிட்டது.

டிஎல்எஸ் விதியின்படி பாகிஸ்தான் அணிக்கு 31 ஓவர்களில் 113 ரன்கள் இலாக்காக நிரணயிக்கப்பட்டுள்ளது.

பேட்டிங் ஆடிவரும் பாகிஸ்தான் 6 ஓவர்களில் 34/0 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி தனது முதல் வெற்றியைப் பெறவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Summary

Rain interrupted the England-Pakistan match in the Women's World Cup. The match was later reduced to 31 overs after the rain stopped.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com